ADDED : ஏப் 27, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி  :அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளியின் உறவினரிடம்  மொபைல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 26; இவர், விக்கிரவாண்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை சந்திக்க நேற்று முன்தினம் சென்றார். அங்கு, இரவு காத்திருப்போர் கூடத்தில் தங்கினார். அப்போது மணிகண்டனிடம் இருந்து மொபைல்போனை 2 பேர் திருடிக் கொண்டு ஓடினர். அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சரண்ராஜ், 19; அதே பகுதி மாயவன் மகன் பூவரசன், 19; என தெரியவந்தது. திருடப்பட்ட மொபைல்போனை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

