/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
/
மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது
ADDED : டிச 28, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், விக்கிரவாண்டி அருகே மதுராப்பக்கம் பகுதியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நண்பர் திருமணத்திற்காக, புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கள்ளக்குறிச்சி அடுத்த பல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 42; சென்னை பெசன்ட்நகர் சி.பி.வி., நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 48; ஆகியோரை கைது செய்து, 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

