/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாஸ்மாக்கில் தகராறு 2 பேர் கைது
/
டாஸ்மாக்கில் தகராறு 2 பேர் கைது
ADDED : ஏப் 04, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அருகே டாஸ்மாக் கடையில் கடனாக பிராந்தி கேட்டு தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் அந்தோணி லிவிங்ஸ்டன், 29, சகாயராஜ், 34; இருவரும் நேற்று முன்தினம் மாலை பாலப்பாடி டாஸ்மாக் கடையில் கடனாக பிராந்தி பாட்டில் கேட்டனர். விற்பனையாளர் நாராயணன் தர மறுத்ததால், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
டாஸ்மாக் மேலாளர் ஸ்டாலின், 54; அளித்த புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து, அந்தோணி லிவிங்ஸ்டன், சகாயராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

