sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

2 கார்கள் மோதல்: 3 பேர் படுகாயம்

/

2 கார்கள் மோதல்: 3 பேர் படுகாயம்

2 கார்கள் மோதல்: 3 பேர் படுகாயம்

2 கார்கள் மோதல்: 3 பேர் படுகாயம்


ADDED : ஏப் 23, 2025 04:12 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : ஆரோவில் அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 காயமடைந்தனர்.

திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு, ஐ20 கார் சென்று கொண்டிருந்தது. காரை புதுச்சேரி, ராகவேந்திரா நகரைச் சேர்ந்த சதீஷ், 46; ஓட்டினார். காரில் ஒருவர் உடன் வந்தார்.

இடையஞ்சாவடி குதிரைப்பண்ணை சாலை அருகே சென்றபோது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஸ்விப்ட் டிசயர் கார், திடீரென சாலையின் குறுக்கே வளைய முயன்றது. அப்போது, சதீஷ் ஓட்டிச்சென்ற கார், ஸ்விப்ட் காரின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 2 கார்களும் சேதமடைந்தன. ஸ்விப்ட் காரில் இருந்த 2 பெண்கள் உட்பட மூவரும் காயமடைந்தனர். ஐ20 காரில் இருந்த சதீஷ் உட்பட 2 பேரும் காயமின்றி தப்பினர்.

தகவலறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us