ADDED : செப் 28, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் நகர பகுதியில் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது, வ.உ.சி.திடல் அருகே உள்ள பங்க் கடையில் குட்கா பொருட்கள் விற்ற பொன்னி நகர் பசுதீன், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திண்டிவனம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் பங்க் கடையில் குட்கா விற்ற தட்சணாமூர்த்தி, 24; என்பவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.