ADDED : நவ 11, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கெடார் சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் அசோகபுரியில் குட்கா விற்பனை குறித்து கடைகளில் சோதனை செய்தனர். அப்போது முருகையன், 45; திருவதி குன்னம் பிரபு, 50; ஆகியோரது கடையில் சோதனை செய்ததில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
உடன், அவர்களிடமிருந்து 350 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.