/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா வழக்கில் மேலும் 2 பேர் கைது
/
குட்கா வழக்கில் மேலும் 2 பேர் கைது
ADDED : அக் 18, 2024 11:30 PM
வானுார்: வானுார் அருகே குட்கா வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், மயிலம் ரோட்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மினி வேனில் குட்கா கடத்தி வந்த சேதராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அருள், 45; அவர் கொடுத்த தகவலின் பேரில், மயிலம் ரோட்டில் கடை நடத்தி வரும் ஆகாசம்பட்டு ரமேஷ், 45; ஆகிய 2 பேரை கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்ட 550 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த கணேஷ், 30; முத்துக்குமார், 27; ஆகியோரிடம் குட்கா வாங்கியது தெரிய வந்தது. அதன் பேரில் குட்கா சப்ளை செய்த கணேஷ், முத்துக்குமார் ஆகிய இருவரையும் வாலாஜாபேட்டையில் நேற்று கைது செய்தனர்.

