/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவிலுக்கு வந்தவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
/
கோவிலுக்கு வந்தவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
கோவிலுக்கு வந்தவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
கோவிலுக்கு வந்தவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
ADDED : மார் 12, 2024 06:15 AM
வானுார் : கோவிலுக்கு வந்தவரை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பெருமாள், 58; இவர், கடந்த 10ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன், கீழ்புத்துப்பட்டில் உள்ள குலதெய்வ கோவிலான அய்யனாரப்பன் கோவிலுக்கு வந்தார்.
இரவு 11:00 மணியளவில் கோவில் அருகே நடந்து சென்ற பெருமாளை, மர்ம நபர்கள் 2 பேர் மிரட்டி, அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துச் சென்றனர்.
புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று, போலீசார் கோட்டக்குப்பம் பகுதியில் ரோந்து பணியின் போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரிடம் விசாரித்தனர்.
அதில் அவர்கள், கீழ்புத்துப்பட்டு தீர்த்தவாரி தெருவைச் சேர்ந்த எத்திராஜ் மகன் அன்பு என்கிற கஞ்சா அன்பு, 25; ஏழுமலை மகன் சிவா, 24; எனவும், இருவரும் பெருமாளிடம் மிரட்டிபணம் பறித்ததும் தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

