/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாடு கட்டுவதில் தகராறு 2 பேர் கைது
/
மாடு கட்டுவதில் தகராறு 2 பேர் கைது
ADDED : செப் 25, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை அருகே மாடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டைச் சேர்ந்தவர் முருகையன் மகன் பரசுராமன், 36; அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகன் ஈசாக், 26; உறவினர்கள். அப்பகுதியில் உள்ள இடத்தில் இவர்களது மாடுகளைக் கட்டுவதில் இரு குடும்பத்திற்குமிடையே தகராறு இருந்து வந்தது.
கடந்த 22ம் தேதி மாலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், ஈசாக், பரசுராமன், அறிவழகன் ஆகிய 3 பேர் காணை போலீசார் மீது வழக்குப் பதிந்து, ஈசாக், அறிவழகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.