/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்குகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது
/
பைக்குகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது
ADDED : டிச 18, 2024 06:18 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்குகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யன், 27; இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் நேற்று முன்தினம் திருடு போனது.
இதேபோன்று, ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 56; என்பவரது பைக்கை நேற்று அதிகாலை 5:00 மணிக்கு 2 பேர் திருட முயன்றதை பார்த்த ராதாகிருஷ்ணன் கூச்சலிட்டார்.
உடன், அக்கம் பக்கத்தினர் திரண்டு பைக்கை திருட முயன்ற இருவரையும் பிடித்து விழுப்புரம் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள், பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை கணேசன்,30; திருநெல்வேலி மாவட்டம், பச்சநல்லுார் சேதுநாதன், 35; என்பதும், இருவரும் ஆதித்யன் பைக்கை திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.
இருவர் மீதம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.