/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீஸ்காரரை கத்தியால் கிழித்த 3 பேர் கைது
/
போலீஸ்காரரை கத்தியால் கிழித்த 3 பேர் கைது
ADDED : செப் 30, 2025 05:51 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரரை கத்தியால் கிழித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த முட்ராம்பட்டைச் சேர்ந்தவர் நரசிம்மராஜ், 30; விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர்.
இவர், நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் வழியாக பைக்கில் வெளியில் வந்தார்.
அப்போது, விழுப்புரம் வரதப்பநாயக்கன் தோப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் பரத் என்கிற ராஜமாணிக்கம், 19; மணிகண்டன் மகன் அபிஷேக், 18; ஹரிபாபு மகன் சஞ்சீவி, 21; ஆகியோர் ஒரே பைக்கில் நரசிம்மராஜ் பைக்கை மோதுவது போல் வந்தனர்.
அப்போது, மெதுவாக செல்லுமாறு கூறிய நரசிம்மராஜிடம், பரத் உள்ளிட்ட 3 பேரும் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டினர்.
பின் பரத், அபிஷேக் ஆகியோர் பைக்கில் வைத்திருந்த கத்தியால் நரசிம்மராஜின் இடது கையில் கிழித்துவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர்.
இதில், காயடைந்த நரசிம்மராஜ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பரத் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.