sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சகோதரர்களை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

/

சகோதரர்களை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

சகோதரர்களை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

சகோதரர்களை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேர் கைது


ADDED : நவ 05, 2024 06:43 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில் பைக்கில் வந்த சகோதரர்களை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் பெரியகாலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன்கள் புனிதஸ்ரீராம், 28; கதிரவன், 19; அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீநாத் மகன் விஷால் (எ) விமலநாதன், 18; மாரிமுத்து மகன் பூவரசன், 28; இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே பைக்கில் வந்த புனிதஸ்ரீராம், கதிரவன் ஆகியோரை நிறுத்தி, நாங்களும் பைக்கில் வருகிறோம் என கூறியுள்ளனர்.

அதற்கு, ஒரே பைக்கில் எப்படி செல்ல முடியும் என, கதிரவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் உட்பட 3 பேரும் சேர்ந்து கதிரவன், புனிதஸ்ரீராம் ஆகியோரை தாக்கி விட்டு தப்பியோடினர். இதில் காயமடைந்த சகோதரர்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கதிரவன் அளித்த புகா ரின் பேரில், தாக்கிய விஷால், பூவரசன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us