/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம்
/
லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம்
ADDED : ஜன 08, 2024 05:27 AM

மயிலம்: மயிலம் அடுத்த செண்டூரில் சரக்கு லாரி பின்னால் கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ குலோத்துங்கன், 65; இவர் தனது மகன் கார்த்தி, 27; மருமகள் திவ்யா, 27; ஆகியோருடன் நேற்று முன்தினம் மாருதி ஸ்விப்ட் காரில் சென்னை சென்றார். காரை கார்த்தி ஓட்டினார்.
இரவு 11:30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த செண்டூர் தேசிய நெடுஞ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் முன் னால் சென்ற சரக்கு கன்டெய்னர் லாரி மீது மோதியது. காரில் ஏர் பலுான் விரிந்ததால் 3 பேரும் காயங்களுடன் தப்பினர்.
காயமடைந்த மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.