sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது

/

மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது


ADDED : மே 05, 2025 05:17 AM

Google News

ADDED : மே 05, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் :புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் கொந்தமூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனை நடத்தினர். புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய சோதனையில், 60 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

விசாரணையில், செஞ்சி அடுத்த அப்பம்பட்டு சுப்ரமணி மகன் பசுபதி, 25; பரணிகுமார் மகன் சதிஷ்குமார், 22; இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி செல்வது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்


திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த வாகன தணிக்கையின் போது, திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மகன் ராம்குமார், 31; அருள் மகன் சுந்தர், 29; ஆகிய இருவரும் பைக்கில், மதுபாட்டில் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து, 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us