sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது

/

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது


ADDED : டிச 21, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டினத்தில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டிவனம் டி.எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே பாழடைந்த ரைஸ் மில் அருகே நின்றிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம், 90 போதை மாத்திரை மற்றும் 3 சிரஞ்சி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த ரொக்கம் ரூ.16,200; மூன்று மொபைல் போன், மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் திண்டிவனம் கிடங்கல் இரண்டு ,பெருமாள் கோவில் தெரு மோகன் மகன் வீரா,29; எம்.ஜி.ஆர். தெரு செல்வம் மகன் ஷியாம்,21; வாணிய பிள்ளையார் கோவில் தெரு நாகரத்தினம் மகன் விஜய், 29; இறையானுார், மாரியம்மன் கோவில் தெரு குமார் மகன் ஸ்ரீதர், 24; என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்த, 4 பேரையும் கைது செய்த, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us