sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது: நகை பறிமுதல்

/

வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது: நகை பறிமுதல்

வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது: நகை பறிமுதல்

வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது: நகை பறிமுதல்

2


ADDED : மார் 30, 2025 03:22 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:22 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கிளியனுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் அடுத்த எறையனுார் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் மனைவி சரோஜா, 38; இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 9ம் தேதி இரவு 16 சவரன் நகை, 90 ஆயிரம் ரூபாய், வீட்டு பத்திரங்கள் கொள்ளை போனது.

இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சிலரை பிடித்து விசாரித்தனர்.

அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மலை சேர்ந்த முருகன், 37; சிவா, 30; நல்லாத்தூர் பொத்த மூக்கு (எ) மணிகண்டன், 29; சின்னசேலம் பிரகாஷ், 27; சென்னை, பெரிய பாளையம் சரவணன், 25; ஆகியோர் கூட்டாக சேர்ந்து, சரோஜா வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு இருப்பதும், ஜாமினில் வெளியே வரும் இவர்கள், தொடர்ந்து திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின், 5 பேரையும் கைது செய்து, 8 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us