sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, பணம் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, பணம் திருட்டு


ADDED : ஏப் 15, 2025 04:42 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையை சேர்ந்தவர் குமரவேல், 47; தனது பிள்ளைகள் படிப்பிற்காக விழுப்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வி.சாலையில் உள்ள வீட்டை வாரம் ஒரு முறை வந்து பார்த்து செல்வது வழக்கம். கடந்த 11ம் தேதி வீட்டை பார்த்து சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

குமரவேல் வீட்டிற்கு வந்து பார்த்து போது கதவு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, நகை பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீப காலமாக விக்கிரவாண்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us