sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதைப் பொருட்களுடன் 7 வாலிபர்கள் கைது மயிலம் அருகே பரபரப்பு

/

போதைப் பொருட்களுடன் 7 வாலிபர்கள் கைது மயிலம் அருகே பரபரப்பு

போதைப் பொருட்களுடன் 7 வாலிபர்கள் கைது மயிலம் அருகே பரபரப்பு

போதைப் பொருட்களுடன் 7 வாலிபர்கள் கைது மயிலம் அருகே பரபரப்பு


ADDED : செப் 21, 2025 04:57 AM

Google News

ADDED : செப் 21, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: கூட்டேரிப்பட்டில் போதை பொருட்கள் வைத்திருந்த, 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியே பைக்கில் வந்த, 3 பேரை மடக்கி விசாரணை செய்தனர்.

விசாரணையில், கூட்டேரிப்பட்டை சேர்ந்த ரகு மகன் சரவணன் 23; கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் அரவிந்த், 21; நெடிமொழியனுார் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் வசந்தகுமார், 22; என்பது தெரிய வந்தது.

அவர்கள் வாகனத்தை ஆய்வு செய்த போது, அதில், 5 கிராம் எடையுள்ள 2 கஞ்சா பாக்கெட்டுகள், 22 போதை மாத்திரைகள், 6 இன்சுலின் சிரஞ்சுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

அவற்றையும், 4 மொபைல்போன் மற்றும் பைக் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர்களுடன் தொடர்பில் இருந்த திண்டிவனம் மேல்பாக்கம் விநாயகர் மகன் சூர்யா, 19; திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ஹரிஹரன் 28; ஆதிமூலம் மகன் ஆலன் 25; காத்தவராயன் மகன் மணிகண்டன் 19; உள்ளிட்ட, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us