/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூட்டிய வீடுகளில் 9 சவரன் நகை திருட்டு
/
பூட்டிய வீடுகளில் 9 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 23, 2024 05:34 AM
விழுப்புரம் : விழுப்புரம் வழுதரெட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஞானவேல்,52; இவர், நேற்று காலை 10:00 மணிக்கு, வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் விழுப்புரம் கோவிலுக்கு சென்றார்.
மாலை வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைந்திருந்தது. பீரோவில் இருந்த 4 சவரன் நகை திருடு போயிருந்தது.
இதேபோல், விழுப்புரம், வேலன் நகரைச் சேர்ந்தவர் திருவேங்கடம் மனைவி குசலம்மாள்,60; இவர், நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிக்கொண்டு, உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் கோவிலுக்குச் சென்றார்.
மாலை திரும்பி வந்து பார்த்தபோது, முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் நகை திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகார்களின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

