/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழுக்கு மரம் ஏறும் வீர விளையாட்டு
/
வழுக்கு மரம் ஏறும் வீர விளையாட்டு
ADDED : அக் 28, 2024 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
அவலுார்பேட்டை ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து, இரவு, கடைவீதியில் வழுக்கு மரம் ஏறும் வீர விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளாக வாலிபர்களும், கிராம பொதுமக்களும் பங்கேற்றனர். பின், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.

