/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குவைத்தில் இருந்து திரும்பியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
குவைத்தில் இருந்து திரும்பியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
குவைத்தில் இருந்து திரும்பியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
குவைத்தில் இருந்து திரும்பியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : ஜூன் 04, 2025 12:27 AM
கோட்டக்குப்பம்: குவைத்தில் இருந்து ஊருக்கு திரும்பிய நபர், திடீரென மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் முஹம்மது ஷரீப் மகன் சாதிக் (எ) குத்புதீன், 30; குவைத் நாட்டில் பர்கர் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று இரவு மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து குத்புதீனை உறவினர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் குத்புதீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ரஹமத்துல் பஷிரியா, கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.