sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைது

/

போலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைது

போலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைது

போலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைது


ADDED : ஜன 06, 2024 04:59 AM

Google News

ADDED : ஜன 06, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம : போலீசார் முன் வெடிகுண்டு வீசி, வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் மூசா,19; திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், கடந்த தீபாவளி அன்று நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அம்பேத்கர் நகர் வழியாக ரோந்து சென்ற போலீஸ் வாகனத்தை நோக்கி வீசி வெடிக்க செய்து, அதனை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமை பார்த்த சிலர் கொடுத்த தகவலின்பேரில், கோட்டக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம், மாணவர் மூசாவை பிடித்து விசாரித்தனர். அதில், ' ஊரில் பெரிய கெத்தாக தன்னை காட்டிக்கொள்வதற்காக, நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசியதை ஒப்புக் கொண்டார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூசாவை கைது செய்து வானுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us