ADDED : ஜன 25, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த காவணிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் ஜெகன்,26; இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் கொளத்துார் அருகே சென்ற போது, அங்கு நின்றிருந்த சாலை போடும் இயந்திரம் மீது பைக் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.