/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காதலனுடன் கிரிவலம் வந்த பெண் கார் மோதி இறந்தது நிரூபணம் வழிப்பறி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
/
காதலனுடன் கிரிவலம் வந்த பெண் கார் மோதி இறந்தது நிரூபணம் வழிப்பறி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
காதலனுடன் கிரிவலம் வந்த பெண் கார் மோதி இறந்தது நிரூபணம் வழிப்பறி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
காதலனுடன் கிரிவலம் வந்த பெண் கார் மோதி இறந்தது நிரூபணம் வழிப்பறி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
ADDED : பிப் 26, 2024 04:43 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே காதலனுடன் வந்த இளம் பெண்ணை வழிப்பறி ஆசாமிகள் துரத்தியதால், அந்த வழியாக வந்த கார் மோதி இறந்தது தெரியவந்துள்ளது.
சென்னை, மாதவரம், திருமலை நகரைச் சேர்ந்த புருேஷாத்தமன் மகன் ரமேஷ், 21; பி.காம்., பட்டதாரி. கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் பவித்ரா, 20; சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி துணிக் கடையில் வேலை பார்த்து வந்தார். காதலர்களான இருவரும் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல கடந்த 23ம் தேதி இரவு சென்னையில் இருந்து ஸ்கூட்டரில் வந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோனேரிக்குப்பம் கூட்ரோட்டில் 24ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் வந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த, வழிப்பறி ஆசாமிகள் இருவர், ஸ்கூட்டரை வழிமறித்து ரமேஷ், பவித்ராவை மிரட்டி வழிப்பறி செய்துள்ளனர். மேலும், பவித்ராவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க பவித்ரா ஓடியபோது அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் பவித்ரா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து ரமேஷ் அளித்த தகவலின் பேரில், ஒலக்கூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், விபத்து ஏற்படுத்திய சென்னை, முடிச்சூரைச் சேர்ந்த கார் டிரைவரான பாஸ்கர், 45; என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சம்பவ இடத்தில் காரை வேகமாக ஓட்டி வந்தபோது, திடீரென பவித்ரா குறுக்கே ஓடி வந்ததால் விபத்தில் சிக்கினார். பயத்தில் காரை நிறுத்தாமல் சென்று விட்டதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய எர்ட்டிகா காரை போலீசார் பறிமுதல் செய்து, பாஸ்கர் மீது வழக்கு பதிந்தனர்.
மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகள் குறித்து தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பவித்ராவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை 6:00 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

