நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் தாய் திட்டியதால் இளம் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகள் வானதி, 26; இவர், வீட்டு வேலைகளை செய்யவில்லை என, அவரது தாயார் ராஜேஸ்வரி கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வானதி, கடந்த 15ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

