sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.1 லட்சம் தங்க நகை பறிப்பு கண்டமங்கலம் அருகே துணிகரம்

/

வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.1 லட்சம் தங்க நகை பறிப்பு கண்டமங்கலம் அருகே துணிகரம்

வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.1 லட்சம் தங்க நகை பறிப்பு கண்டமங்கலம் அருகே துணிகரம்

வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.1 லட்சம் தங்க நகை பறிப்பு கண்டமங்கலம் அருகே துணிகரம்


ADDED : ஜூன் 30, 2025 03:19 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே பைக்கில் சென்ற வாலிபரை கத்தியால் வெட்டி, அவர் அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புடைய நகையை பறித்து சென்ற முகமூடி அணிந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த கலித்தாத்தாள்குப்பத்தை சேர்ந்தர் தண்டபாணி மகன் கவுதம் 27; இவர், நேற்று இரவு 7:30 மணியளவில், புதுச்சேரி அருகே செட்டிப்பட்டில் உள்ள நண்பரை பார்க்க பைக்கில் சென்றுள்ளார். தமிழக பகுதியான கண்டமங்கலம் அருகே சித்தலம்பட்டு ஏரிக்கரை சாலையில் சென்றபோது, முகமூடி அணிந்த 3 பேர, கவுதமை வழிமறித்து, கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவர் அணிந்திருந்த ஒன்னே கால் சவரன் தங்க செயின் மறறு 2 கிராம் மோதிரத்தை பறித்தனர். மேலும், அவரது பைக்கையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த கவுதம் மயங்கிக் கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us