/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா
/
ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா
ADDED : டிச 19, 2025 05:57 AM

வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் ஐயப்ப சுவாமி உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, குருசாமிகள் அருளழகன், லட்சுமணன் தலைமையில் ஐயப்ப மாலை அணிந்தவர்கள், சரண கோஷங்கள் முழங்க இரும்பை மாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்றடைந்தனர்.
அங்கு ஐயப்ப சுவாமிக்கு சந்தனம், பால் உள்ளிட்ட வாசனை திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. பின், அங்குள்ள தீர்த்தக்குளத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நடந்தது. திருக்குளத்தில் இருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வரசித்தி விநாயகர் கோயிலுக்கு வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் நடந்தது.

