sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விசா காலம் முடிந்து ஆரோவில்லில் வசித்த இரு அமெரிக்கர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

/

விசா காலம் முடிந்து ஆரோவில்லில் வசித்த இரு அமெரிக்கர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

விசா காலம் முடிந்து ஆரோவில்லில் வசித்த இரு அமெரிக்கர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

விசா காலம் முடிந்து ஆரோவில்லில் வசித்த இரு அமெரிக்கர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

2


ADDED : செப் 15, 2025 02:48 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:48 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: விசா காலம் முடிந்து, ஆரோவில் பகுதியில் தங்கியிருந்த அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவரை போலீசார் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் குதிரை பண்ணை அருகில், இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் பால் மேக்லனி, 51; டோனி லூ டிக்கி, 64; ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு தங்கினர்.

அப்போது, வீட்டின் உரிமயைாளர் ஜெயவேலுவிடம், டோனி லுா டிக்கி, தான் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றபிறகு வங்கி பணியில் ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே இருவரும் புதுச்சேரி குருசுகுப்பத்தில் கடந்த, 2017ம் ஆண்டில் இருந்து தங்கி இருந்தனர். அப்போதே இருவரின் விசாவும் முடிந்துள்ளது. அதனால் அவர்களை புதுச்சேரி இந்திய குடியுரிமை துறை போலீசார் தேடி வந்தனர். இருவரும் ஆரோவில் பகுதியில் வசிப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

புதுச்சேரி இந்திய குடியுரிமை துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமை யில் போலீசார் மற்றும் ஆரோவில் போலீசார், அவர்கள் குடியிருந்த வீட்டை சோதனை செய்து இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களின் விசா காலம் முடிந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து இருவரையும் அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் .






      Dinamalar
      Follow us