sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துணை முதல்வர் மீது விமர்சனம் நடிகர் பிணை பத்திரம் தாக்கல்

/

துணை முதல்வர் மீது விமர்சனம் நடிகர் பிணை பத்திரம் தாக்கல்

துணை முதல்வர் மீது விமர்சனம் நடிகர் பிணை பத்திரம் தாக்கல்

துணை முதல்வர் மீது விமர்சனம் நடிகர் பிணை பத்திரம் தாக்கல்


ADDED : ஏப் 02, 2025 05:42 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை, யு டியூப் சேனலில் விமர்சனம் செய்த வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்றதற்காக, வானுார் நீதிமன்றத்தில் நகைச்சுவை நடிகர் பிணை பத்திரம் தாக்கல் செய்தார்.

மகாராஷ்டிரா நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா சமீபத்தில் தனது யு டியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பா.ஜ., கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வரானது குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஏக்நாத் ஷிண்டேவின் கட்சித் தொண்டர்கள் யு டியூப் சேனலின் ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து, குனால் கம்ரா மீது ஒரு வழக்கு மற்றும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவை சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீது என 2 வழக்குகளை மும்பை போலீசார் பதிவு செய்தனர். இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நகைச்சுவை நடிகர் குனால் கர்மா, கடந்த மாதம் 28ம் தேதி முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், தற்போது விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த ஆரோவில் பகுதியில் வசித்து வருவதாகவும், மும்பை சென்றால் தன்னை காவல் துறையினர் கைது செய்வார்கள். மேலும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, முன் ஜாமின் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி, குனால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், விழுப்புரம் மாவட்டம், வானுாரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்து மகாராஷ்டிரா, கார்க் போலீஸ் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்., 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து குனால் கம்ரா நேற்று காலை 10:30 மணிக்கு வானுார் நடுவர் மற்றும் உரிமையில் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரீத்தி முன்னிலையில் ஆஜராகி, பிணை பத்திரம் தாக்கல் செய்தார்.






      Dinamalar
      Follow us