/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் உட்கட்டமைப்பு திட்ட கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
வேளாண் உட்கட்டமைப்பு திட்ட கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
வேளாண் உட்கட்டமைப்பு திட்ட கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
வேளாண் உட்கட்டமைப்பு திட்ட கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : அக் 28, 2025 06:05 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு, மானிய கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (வணிகம்) அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ், விழுப்புரம் மாவட்டத்திற்கு 69 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், பயனாளிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை கடன், 7 ஆண்டுகள் வரை 3 சதவீதம் வட்டி, மானியமும் மற்றும் கடன் உத்தரவாதமும் வழங்கப்படும்.
விவசாய தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மின்னணு வணிக மையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டுமிடம், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், மண் புழு உரம் தயாரித்தல், சோலார் மின் உற்பத்தி போன்றவைகளுக்கு இத்திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு agriinfra.dac.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர், தேசியமய வங்கி, நபார்டு வங்கி, வேளாண்துறை அலுவலகங்கள், வேளாண் விற்பனை, வணிகத்துறை, பொறியியல் அலுவலர்கள், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்ட அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

