/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாய நிலங்களில் வேளாண் ஆராய்ச்சி நிறுவன குழு ஆய்வு
/
விவசாய நிலங்களில் வேளாண் ஆராய்ச்சி நிறுவன குழு ஆய்வு
விவசாய நிலங்களில் வேளாண் ஆராய்ச்சி நிறுவன குழு ஆய்வு
விவசாய நிலங்களில் வேளாண் ஆராய்ச்சி நிறுவன குழு ஆய்வு
ADDED : பிப் 09, 2026 04:26 AM

செஞ்சி: மணியம்பட்டு கிராமத்தில் வேளாண் ஆராய்ச்சி நிறுவன குழுவினர் விவசாய நிலங்களில் ஆய்வு செய்தனர்.
வல்லம் வட்டாரம், மணியம்பட்டு கிராமத்தில் பனிப்பயிர் மஞ்சள் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திண்டிவனம் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் ஜமுனா தலைமையில், நோயியில் பேராசிரியர் சஞ்சீவ்குமார், வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) சத்யா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்தனர். இதில் வேர் அழுகல் பூச்ஞான நோய் தாக்குதல் இருப்பதை கண்டறிந்தனர்.
இதை தடுக்க திரைக்கோடர்மா விரிடி மற்றும் பேசில்லெஸ் சப்டீலீஸ் போன்ற நன்மை செய்யும் நுண்ணுயிர்களை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும். அல்லது கார்பன்டசிம் எனும் பூஞ்சான கொல்லியை லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவில் பயிரின் வேர் நன்கு நனையும்படி வயலில் இட வேண்டும். அல்லது நேட்டிவோ எனும் பூஞ்சான கொல்லியை லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவில் பயன்படுத்தி நோயினை கட்டுப்படுத்திட வேண்டும் என விவசாயிகளிடம் அறிவுறுத்தினர். மேலும் பணிப்பயிரில் கஸ்கூட்டா எனப்படும் ஒட்டுண்ணி களை செடிகள் இருப்பதை கட்டுப்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

