/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
/
காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 19, 2025 03:03 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டு காரீப் பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நெல் நடவு விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள்ளும், வேர்க்கடலை கம்பு விவசாயிகள் ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
நெற்பயிருக்கு 725.71 ரூபாயும், வேர்க்கடலைக்கு 623.75 ரூபாயும், கம்பு பயிருக்கு 239.90 ரூபாயும் விவசாயிகள் செலுத்தி காப்பீடு செய்யலாம். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தலாம்.
நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விபரங்களை சரியாக அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.