ADDED : மார் 07, 2026 05:07 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழாவையொட்டி அ.தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.
அரசூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் வரவேற்றார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், பாசறை செயலாளர் வினோத்குமார், பாசறை தலைவர் வெங்கடாஜலபதி, ஊராட்சி தலைவர் ரவிசந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மகளிரணி துணைச் செயலாளர் காயத்ரி சிறப்புரையாற்றினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், செண்பகவேல், மணிராஜ், பொதுக்குழு உறுப்பினர் மணி, முன்னாள் ஊராட்சி தலைவர் மேகநாதன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சின்னசாமி, அரசூர் கிளைச் செயலாளர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய இணைச் செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

