/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு அ.தி.மு.க., பழனிசாமி கிண்டல்
/
பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு அ.தி.மு.க., பழனிசாமி கிண்டல்
பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு அ.தி.மு.க., பழனிசாமி கிண்டல்
பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு அ.தி.மு.க., பழனிசாமி கிண்டல்
ADDED : ஜூலை 12, 2025 04:05 AM

வானூர்: பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என வானூர் தொகுதியில் நடந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
வானுார் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில், அ.தி.மு.க., சார்பில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர் சண்முகம், சக்ரபாணி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.
இதில் பொதுச்செயலா ளர் பழனிசாமி பேசியதாவது:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 575 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறி வருகிறார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றனர்.
ஆட்சிக்கு வந்து, 28 மாதங்கள் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க., அழுத்தத்தால் உரிமை தொகை வந்தது. தேர்தல் வர உள்ளதால், 30 லட்சம் பேருக்கு வழங்க விதிகளை தளர்த்தி உள்ளனர். அதையும் 8 மாதம் மட்டுமே வழங்க உள்ளனர். 52 மாதம் பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு பிறகு தகுதி அடிப்படையில் என கூறி அதையும் நிறுத்திவிடுவர். இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டாலும், தி.மு.க.,வில் மட்டும் தொடர்கிறது.
கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து அ.தி.மு.க., ஆட்சியில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டன. விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெ.,பல்கலைக்கழகத்தை ஸ்டாலின் ரத்து செய்து விட்டார்.
அ.தி.மு.க., ஆட்சியில் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அதிக நிதி ஒதுக்கி புரட்சி செய்தேன். கடந்த, 4 ஆண்டுகளாக, கல்வி வளர்ச்சிக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அ.தி.மு.க., ஆட்சியில் கொடுக்கப்பட்டதால் 2,818 மாணவர்கள் மருத்துவம் படித்துள்ளனர். பா.ஜ.,வுடன் உறவில் இருந்தாலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம், 162 ஐ பின்பற்றி 7.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றினோம்.
பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., அடிமை என்கிறார் ஸ்டாலின். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நீங்களும், உங்கள் அமைச்சர்களும் தான் நடுங்கி கொண்டிருக்கின்றீர்கள்.
தி.மு.க.,வுடன் காங்., கூட்டணி பேசிக்கொண்டே ஸ்டாலினின் தாயாரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. பின், ஒப்பந்தம் முடிந்து விட்டது. அ.தி.மு.க., எதற்காகவும் அஞ்சாத கட்சி. தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள் எங்கு இருப்பார்கள் என நாட்டு மக்களுக்கு தெரியும்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ள நிலையில் ஓரணியில் எங்கு திரள்வது? தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
லோக்சபா மறுவரைவு திட்டத்தால் தமிழகத்தில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என மத்திய அரசு மீது ஸ்டாலின் பழிபோடுகிறார்.
தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களை மடை மாற்றம் செய்ய, ஸ்டாலின் தந்திரமாக பேசி வருகிறார். பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். வரும் தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.