ADDED : ஆக 15, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்; புதுச்சேரியில் இருந்து மரக்காணத்திற்கு மதுபாட்டில் கடத்திய நபரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த அனுமந்தை பஸ் நிறுத்தம் அருகே மரக்காணம் சப் இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர், புதுச்சேரியில் இருந்து 90 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், மண் டவாய் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் தயாளன், 25: என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.