sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பாசிப்பயிறு விதைப்பண்ணை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

/

பாசிப்பயிறு விதைப்பண்ணை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பாசிப்பயிறு விதைப்பண்ணை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பாசிப்பயிறு விதைப்பண்ணை வேளாண் அதிகாரிகள் ஆய்வு


ADDED : செப் 22, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அரசு விதைப் பண்ணையில் புதிய ரக கோ-9 பாசிப் பயிறு விதைப்பண்ணையை, வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

வானுார் அரசு விதைப் பண்ணையில் காரிப் பருவத்திற்கு புதிய பாசிப்பயிறு கோ-9 ரகம், 3 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு காய் பிடிக்கும் தருணத்தில் உள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 25 கிலோ பாசிப்பயிறு கோ-9 வல்லுனர் விதைகள் பெறப்பட்டு ஆதார விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரகம் ஏப்ரல், மே மற்றும் ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாகுபடி செய்ய உகந்தது. வயது 65 முதல் 70 நாட்களாகும். கடந்த 2023 ஆண்டு வெளியிட்ட புதிய ரகம் ஆகும்.

மகசூல் எக்டருக்கு 825 கிலோ கிடைக்கப்பெறும். இயந்திரம் மூலம் அறுவடை செய்ய உகந்த ரகமாகும்.

ஒரே சீராக முதிர்ச்சியடையும் திறன் கொண்ட ரகமாகும். இந்த புதிய ரகம் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு எத்திராஜ் கூறினார்.






      Dinamalar
      Follow us