/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : அக் 03, 2025 11:19 PM

திண்டிவனம் : ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2006-2007ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர்கள் சங்கர், காஞ்சனா முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்கள் சுந்தரலிங்கம், விஜயன், குணசேகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவகுமார் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.