ADDED : மே 24, 2026 05:58 AM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1989-1990ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் காந்தரூபி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணை குழு அமுதா வரவேற்றார்.
முன்னாள் மாணவர்கள், தங்களது ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். முன்னதாக, முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளியில் அமைக்கப்பட்ட 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நுழைவு வாயில் மற்றும் கேட் ஆகியவற்றை, மாவட்ட கல்வி அலுவலர் உதயசூரியன் திறந்து வைத்தார்.
விழா ஒருங்கிணைப்பு குழு சங்கர், சக்திவேல், நாகராஜ், செல்வபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். எழிலரசி நன்றி கூறினார்.
