sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி அருகே பழங்கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

/

செஞ்சி அருகே பழங்கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே பழங்கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே பழங்கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு


ADDED : நவ 12, 2025 03:30 AM

Google News

ADDED : நவ 12, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே பழங்கால சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர் கண்டு பிடித்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் செஞ்சி அடுத்த நங்கியானந்தல் கிராமத்தில் கள ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு, விஷ்ணு துர்கை மற்றும் நடுகல் சிற்பம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

செஞ்சி அடுத்த நங்கியானந்தல் புது ஏரிக்கு எதிரே பொன்னியம்மன் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, 2 சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

நீளமாக உள்ள ஒரு பலகைக் கல்லில் தேய்ந்து போன நிலையில் நின்ற நிலையில் விஷ்ணு துர்கை சிற்பம் உள்ளது. ஆடை அணிகலன் மற்றும் அலங்கரிக்கப்பட்ட தலைமுடியுடன், வலது கரத்தில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் உள்ளது.

இந்த சிலை கி.பி.12 அல்லது 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தி யுள்ளார்.

மற்றொரு பலகைக் கல்லில் கலைநயத்துடன் நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. போருக்கு செல்லும் வீரனைப் போன்று கால்கள் முன்னும் பின்னும் உள்ளன.

வீரனின் வலது கரத்தில் பெரிய கத்தியைப் போன்ற ஆயுதமும், இடது கரத்தில் நீண்ட வில்லும் காணப் படுகிறது.

நேர்த்தியான மீசையும், அழகிய தலை அலங்காரமும், அணிகலன்களுடன் இடைக்கச்சையும் காணப்படுகிறது.

இது போரில் உயிர் நீத்த படைத்தலைவன் அல்லது போர் வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.16ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது.

நங்கியானந்தல் கிராமம் சோழர், விஜயநகர ஆட்சியின் போது சிறப்புடன் இருந்ததை சிற்பங்கள் உணர்த்துகின்றன. இவற்றை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

ஆய்வின்போது மன்ற தலைவர் வெங்கட சுப்ரமணியன், முன்னாள் தலைவர் குணசேகர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us