ADDED : பிப் 13, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: முகையூர் அடுத்த ஆயந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் பூமாதேவி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆரோக்கியதாஸ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினர், முகையூர் அரசு மருத்துவர் ஜோஸ் பிரேம்குமார் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் ஸ்டெல்லா, நீதிநாதன், சீனிசங்கர் ஆகியோர் பேசினர். உடற்கல்வி ஆசிரியர் ஜான்ஜெயசீலன் நன்றி கூறினார்.