sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மொபட் மீது கார் மோதி விபத்து மருத்துவமனையில் மேலும் ஒருவர் பலி

/

மொபட் மீது கார் மோதி விபத்து மருத்துவமனையில் மேலும் ஒருவர் பலி

மொபட் மீது கார் மோதி விபத்து மருத்துவமனையில் மேலும் ஒருவர் பலி

மொபட் மீது கார் மோதி விபத்து மருத்துவமனையில் மேலும் ஒருவர் பலி


ADDED : ஜூன் 19, 2025 05:19 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நலலுார : திருவெண்ணெய்நல்லுார் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரப்பன், 60; நல்லதம்பி, 55; இருவரும் கடந்த 13ம் தேதி இரவு மொபட்டில், பேரங்கியூரிலிருந்து வலையாம்பட்டு செல்வதற்காக பேரங்கியூர் கூட்ரோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர்.

மொபட்டை நல்லதம்பி ஓட்டினார். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் வீரப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வீரப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து படுகாயமடைந்த நல்லதம்பியை மீட்டு அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்ல தம்பி, நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us