/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
/
மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
ADDED : நவ 09, 2024 08:30 AM

திண்டிவனம்: மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சோதனையைத் தொடர்ந்து, நேற்று திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியிலிருந்து இரவு 8:15 மணி வரை டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத பணம் ரூ.1.20 லட்சம் மற்றும் சில ஆவணங்கள் சிக்கியது. இதுதொடர்பாக, சார் பதிவாளர் வெங்கடேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை 7:00 மணியளவில், திண்டிவனம், ஜெயபுரம் மூன்றாவது தெருவில் உள்ள அபார்ட்மெண்ட்டில் வசித்து வரும் சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மதியம் 12:45 மணிவரை சோதனை நடத்தினர்.
சுமார் 6:00 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.