/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள் நலக்குழுவில் காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
குழந்தைகள் நலக்குழுவில் காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
குழந்தைகள் நலக்குழுவில் காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
குழந்தைகள் நலக்குழுவில் காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 20, 2024 11:30 PM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பதவி அரசு பணி கிடையாது. விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம். சட்டம், சமூக பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம், கல்வி, மனிதமேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற மற்றும் தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்போடு ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யும் போது 35 வயதிற்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு நபர் குழந்தை நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர். விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள் இந்த பதவிக்கான படிவத்தில், இந்த தகவல் வெளியாகிய 15 நாட்களுக்குள் இயக்குனர், சமூக பாதுகாப்பு துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 600010 என்ற முகவரியில் கிடைக்கும் படி விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

