sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெளிநாட்டு பல்கலையில் படிக்க கடன் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு

/

வெளிநாட்டு பல்கலையில் படிக்க கடன் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளிநாட்டு பல்கலையில் படிக்க கடன் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளிநாட்டு பல்கலையில் படிக்க கடன் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : அக் 25, 2025 06:53 AM

Google News

ADDED : அக் 25, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் வெளிநாட்டு பல்கலையில் படிப்பதற்கான கடன் திட்டத்தில் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், 100 பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்ள கடன் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கடன் பெற, விண்ணப்பதாரர் பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தபட்டோர், சீரமரபினராக இருக்க வேண்டும்.

சாதி சான்றிதழ், குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

மாநில அரசின் வருவாய் சான்றிதழ், தகுதிவாய்ந்த அலுவலர்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு மாணவருக்கு அதிகபட்ச கடன் வரம்பு ரூ.15 லட்சத்திற்கு உட்பட்டு பாட திட்டத்தின் செலவில் 85 சதவீதம் டில்லியின் தேசிய பிற்ப டுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் மூலமும், மீதமுள்ள 15 சதவீதம் தமிழக அரசு மூலமும் வழங்கப்படுகிறது.

கடன் தொகை, சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், புத்தகம், எழுது பொருட்கள், தேர்வு, ஆய்வகம், நுாலக கட்டணம், உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள், கடன் காலத்திற்கான காப்பீட்டு கட்டணங்கள் கொண்டதாகும்.

கல்வி நிறுவனத்திற்கு செலுத்திய கட்டண அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படும்.

முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கட்டண தவணைகள் விடுவிக்கப்படும். 21 வயது முதல் 40 வயது வரையுள்ளோர் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம்.

மாணவர்களிடம் இருந்து அதிகபட்சமாக பத்தாண்டுகளுக்குள் கடன் தொகை மீட்கும் காலமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை, www.tabcedco.tn.gov.in இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களோடு சம்பந்தபட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்கலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us