/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா
/
பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா
பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா
பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா
ADDED : நவ 24, 2025 06:33 AM

விழுப்புரம்: வளவனுார் பிரம்மாகுமாரிகள் தியான நிலையத்தில் ஆன்மீக சேவாதாரிகளுக்கான பாராட்டு விழா நடந்தது.
வளவனுார் பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் கடந்த 21 ஆண்டுகளாக ஆன்மீக சேவை செய்து வருகிறது. இங்கு தினந்தோறும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஞான உபதேசம், ராஜயோக தியான பயிற்சி இலவசமாக கற்றுத்தரப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் தியான பயிற்சி பெறுகின்றனர்.
இந்த மையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சேவை செய்த ஈஸ்வரிய சேவாதாரிகளை பாராட்டி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தியான பயிற்சி தொடர்ந்து செய்வதால், ஆயுட்காலம் அதிகரிப்பதோடு, குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் கிடைப்பதாக, மைய நிர்வாகி செல்வமுத்துகுமரன் தெரிவித்தார்.

