ADDED : ஏப் 02, 2025 03:33 AM

செஞ்சி : மாநில அளவில் நடந்த ஒலிம்பியாட் கணித போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாாட்டு விழா செஞ்சியில் நடந்தது.
சென்னையில் மாநில அளவில் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடந்த ஒலிம்பியாட் கணித போட்டியில் செஞ்சி கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 7ம் வகுப்பு மாணவர் சாம்கிருஷ்ணா 4ம் இடமும், 9ம் வகுப்பு மாணவி கனிஷ்கா 24ம் இடமும், 8ம் வகுப்பு மாணவர் சூர்யா 25ம் இடமும் பிடித்தனர். மாநில அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் 8ம் வகுப்பு மாணவி கேசவர்தினி இரண்டாம் இடம் பிடித்தார்.
செஞ்சியில் உதவும் உள்ளங்கள் டிரஸ்ட் நடத்திய சிலம்பம் போட்டியில் 8ம் வகுப்பு மாணவி சுஜிதா முதலிடமும், 6ம் வகுப்பு மாணவி காருண்யா 2வது இடமும், மிஷிகா 3வது இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. தாளாளர் ரங்கநாதன் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
பள்ளி முதல்வர் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

