/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு
/
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : டிச 25, 2024 06:38 AM

விழுப்புரம் : தமிழக அரசின் தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் சாதித்த விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகளை, சி.இ.ஓ., அறிவழகன் பாராட்டி, வாழ்த்தினார்.
தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் உதவி தொகை வழங் குவதற்கான தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நடைபெறுவது வழக்கமாகும்.
இந்தாண்டு கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் நடந்த தேர்வை மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்று எழுதினர்.
இந்த தேர்வில், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி கள் காயத்ரி, ஆஷிகா ஆகியோர் 95 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து சாதித்துள்ளனர்.
இந்த மாணவிகள், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
பள்ளி தாளாளர் ராஜசேகரன், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன், பொருளாளர் சிதம்பரநாதன், முதல்வர் யமுனாராணி உட்பட ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.

