/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்தோர் கைது
/
அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்தோர் கைது
ADDED : செப் 28, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு, அனுமதியின்றி விளம்பர அலங்கார வளைவு வைத்திருந்த கொளத்துாரை சேர்ந்த முருகன் மகன் பாலாஜி,32; பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சேகர் மகன் பாலாஜி,29; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.