/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபோதையில் தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு
/
மதுபோதையில் தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : மார் 13, 2024 06:32 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மது போதையில், வாலிபர்களைத் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் மகன் ஆகாஷ், 27; இவரது நண்பர்கள் அருண்குமார், 25; விக்னேஷ், 28; நேற்று முன்தினம் இரவு, தன்சிங்குபாளையம் ரேணுகாம்பாள் கோவிலின் பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, மது போதையில் அங்கு வந்த நரையூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிரஞ்சீவி, 25; மணியரசன் மகன் மைக்கேல், 26; ஆகியோர் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்து, தாக்கி, மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், சிரஞ்சீவி, மைக்கேல் ஆகியோர் மீது வளவனுார் போலீசார், மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

