/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மீது ஆட்டோ மோதி விபத்து ; 4 பேர் காயம்
/
கார் மீது ஆட்டோ மோதி விபத்து ; 4 பேர் காயம்
ADDED : டிச 05, 2024 07:02 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் டிரைவர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம், வி.மருதுாரை சேர்ந்தவர் ஏழுமலை,40; இவர், நேற்று முன்தினம் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றி கொண்டு புதுச்சேரி மார்க்கமாக சென்றார். கோலியனுார் கூட்ரோடு அருகே சென்ற போது, முன்னால் சென்ற ஷிப்ட் காரை ஓட்டியவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில், ஏழுமலை, ஆட்டோவில் பயணித்த வி.மருதுார் ராஜேஸ்வரி,40; கோமதி,74; பூங்கோதை,70; ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அங்கிருந்த சிலர் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெறுகின்றனர்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.